Friday, March 17, 2017

ஏன் கண்ணுல தண்ணி வருது


வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது
=================================================

ஒரு ஊர்ல...
ஒரு வெங்காயம், ஒரு தக்காளி,
ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.
ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.
அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு.
அதை கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க.
சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்கு கிளம்பினாங்க.
போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில ஆக்ஸிடண்ட் ஆகி தக்காளி நசுங்கி செத்துப் போச்சு.
அதை பார்த்து வெக்ஸ் ஆன வெங்காயம், கதறி கதறி அழுதது.
தனியாகி போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி, "உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம்.
இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா...?" ன்னு கேட்டு,
"ஓ..." ன்னு அழுதுச்சு.
அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், "சரி..., இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க" ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதான படுத்தினாராம்.
(ஸோ..., இனிமே யாராச்சும், "வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது" ன்னு கேட்டா, 'திருதிரு'ன்னு முழிக்காம, சோகமான இந்த திக் ஃப்ரெண்ட்ஸ் கதைய
தெரியப்படுத்துங்க)

Bookmark and Share

வளர்த்த தாயின் முதுகில் ஏறி


வளர்த்த தாயின் முதுகில் ஏறி
பெற்ற தாய்க்கொரு முத்தம்..
அழகு..

















Bookmark and Share

குழம்பு வைக்க தெரியாது - புலம்ப வைக்க தெரியும்


சில பொண்ணுங்களுக்கு 😂
வீட்டுல குழம்பு வைக்க சொன்ன வைக்க தெரியாது
ஆனா
பசங்கள...
புலம்ப வைக்க மட்டும் நல்லாவே தெரியும்😡

------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு முதலாளி Zoo ஒன்றை ஆரம்பித்தார். நுழைவுக் கட்டணம் ரூ.100. யாரும் வரவில்லை. பிறகு ரு.50, ரூ.20 என்றார். யாரும் வரவில்லை. அனுமதி இலவசம் என்றார். கடுமையான கூட்டம். எல்லோரும் உள்ளே வந்த பிறகு, புலிக் கூண்டைத் திறந்து விட்டு, வெளிக் கேட்டைப் பூட்டி விட்டார். வெளியே வர வேண்டுமானால் 303ரூ கட்டணம் என்றார். அந்த முதலாளிதான் Jio முதலாளி..

------------------------------------------------------------------------------------------------------------------------

"படிச்சா வேலதான் கெடைக்கும்...!!!
நடிச்சா இந்த நாடே கெடைக்கும்...!!!!

------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? 😅😅😅
😅
😅 ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்
------------------------------------------------------------------------------------------------------------------------
😅 டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....??? 😅😅😅
😅 வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!! 😅
------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... 😅😅😅
😅 மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்... 😅😅
------------------------------------------------------------------------------------------------------------------------
கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???'' 😅😅😅
😅 டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்......??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!''
------------------------------------------------------------------------------------------------------------------------
"மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???" 😅😅😅
😅 "அது.... குருவி....!!!"
------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....??? உங்களுக்குத் தெரியுமா.....??? 😅😅😅
😅 நண்பர்: தெரியுமாவாவது....??? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். 😅
------------------------------------------------------------------------------------------------------------------------
பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை." 😅😅😅
😅 வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது." 😅
------------------------------------------------------------------------------------------------------------------------
ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்...??? 😅😅😅
😅 ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....??? 😅
------------------------------------------------------------------------------------------------------------------------
(பரீட்சை ஹாலில்)
😅 ரகு : வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா...??? 😅
------------------------------------------------------------------------------------------------------------------------
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்.....!!! 😅😅😅
😅 கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே...!!! 😅
------------------------------------------------------------------------------------------------------------------------
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்...??? 😅😅😅
😅 ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்.....!!! 😅
------------------------------------------------------------------------------------------------------------------------
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான் 😅😅😅
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான் 😅
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------

Bookmark and Share

Thursday, March 16, 2017

கல்யாணத்தை நிறுத்துங்க


ஒரு நாள் காட்டில் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய சுயம்வரம் நடந்தினாங்க.😜

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.😀

இறுதி போட்டியில காக்கா👍 ஜெயிச்சுடுச்சு.

காக்கை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. காக்காவுக்கு ஒரே குஷி போங்க......😍😍

காக்கா கிளிக்கு தாலி எடுத்து கட்டறப்ப,கல்யாணத்தைநிறுத்துங்க”🖐🏿*ன்னு ஒரு குரல் கேட்டது.^

திரும்பி பார்த்தால் போலீஸ்...😇

போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

இதை பார்த்த கிளிக்கு துக்கம் தாங்கல.....

தேம்மி தேம்மி அழுவுது....

இதை பார்த்து கல்யாண வீடே சோகமாயிட்டு?

சரி விசயத்துக்கு வருவோம்.......

காக்காவ போலீஸ் கைது பண்ணியது ஏன்...? ஏன்?
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

நினைவு இருக்கா? நாம
ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த திருட்டு குற்றதுக்கு இப்ப அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

சட்டம் தன் கடமையை செய்யும்.....

நீதி....
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

Bookmark and Share

காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல


டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.

கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.
மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....
ஆனா உங்களுக்கு (தலைப்பை மீண்டும் படிக்கவும்)

கணவன்: ???????!!!!!😂

Bookmark and Share

துன்பங்கள் தாக்கவே செய்யும் - கவலைப்பட வேண்டாம்




































Bookmark and Share

Blog Archive