Tuesday, March 14, 2017

இதை உங்கள் மனைவியிடம் முயற்சித்து பாருங்கள்


ரொம்ப போரடிக்குது,
டைமே போகமாட்டேங்குதுனு
பதிவு போட்ருந்த ஒரு தாய்குலத்துட்ட,
வாங்களேன் இன்பாக்ஸ்ல கொஞ்ச நேரம் பேசிட்ருக்கலாம்னேன்...
அதுக்கே அன் ப்ரண்ட் பண்ணிட்டாப்ல...
டீசன்ஸி இல்லாத சமூகமடா...!!!

--------------------------------------------------------------------------------------------

நீ இவ்ளோ கடவுள் பக்தி உள்ளவனா

ஒரு இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான்,
"இந்த மாதிரி...அதாவது..."
"அட ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு"
"அது...நானும் ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்..."
"நல்ல விஷயம்.."
"இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா"
"ஓ கலக்கு"
"அதாவது... அவங்க வீட்ல எல்லாரும் பார்ட்டிக்கு போய்டுவாங்களாம்"
மெடிக்கல்காரர்,"ஹேய் அப்டியா...? "
"இல்ல.. எனக்கு இது தான் முதல் தடவ"
"ஓ அது தான் உன் பிரச்னையா...?"அப்டின்னு ஆரம்பிச்சு சகலமும் சொல்லி தர வேண்டியத தந்து அட்வைஸ் பண்ணி அனுப்புறார்.
அந்தப் பொண்ணு வீட்டுக்கு போறான். எல்லோர்கிட்டயும் நல்லா பேசறான்.
அவங்கம்மா,"சரிப்பா...நாங்க சர்ச்சுக்கு போறோம்,நீங்க பேசிட்டு இருங்க,சின்ன வயசுப்பசங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் பிடிக்கிறதில்ல"ன்னாங்க.
அவன் அவசரமா "இல்ல...நானும் வர்றேன்"அப்டின்னான்.
அந்தப் பொண்ணு பதட்டமா ஆனா அவன் காதுல கிசுகிசுப்பா,
"யேய் என்ன சொல்ற நீ இவ்ளோ கடவுள் பக்தி உள்ளவன்னு என்கிட்ட சொல்லவேயில்லயே"
அவன் உடனே சொன்னான்,
"உங்கப்பா மெடிக்கல் ஷாப் வச்சிருக்காருன்னு நீ மட்டும் சொன்னியா?"

--------------------------------------------------------------------------------------------

" அர்ச்சகர்: சுக்லாம் ப்ரதரம் விஷ்ணும் சதுர்புஜம்
சசி வரணும்
சசி வரணும்
சசி வரணும்

பக்தர்: சுவாமி சசி வந்தாச்சு
அடுத்த மந்திரத்த சொல்லுங்கோ

அர்ச்சகர் : தமிழ்நாடு ஸ்வாகா..........:P

--------------------------------------------------------------------------------------------

நண்பர் வரும்போது கணவன்
மனைவியை நிமிர்ந்து பார்த்தால்....
காபி கொண்டு வா என்றுபொருள்,

அதற்கு மனைவி முறைத்தால்..........
அவனுடன் வெளியபோய் குடி என்றுபொருள்....!

--------------------------------------------------------------------------------------------





























Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive